சீமான், மீது மானநஷ்ட வழக்கு:

24.08.2024 09:23:19

சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக திருச்சி எஸ்பி வருண்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.  இது குறித்து வருண்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

நான் வருண்குமார் வீரசேகரன் IPS. பல் மருத்துவருக்கான படிப்பை முடித்திருந்தாலும் காவல்துறை மேல் உள்ள பற்று காரணமாக 2010-ம் ஆண்டு UPSC குடிமைப்பணிகள் தேர்வு எழுதினேன். அதில், அகில இந்திய அளவில் 3-ம் இடத்தை பிடித்திருந்தாலும், IPS -ஐ தேர்ந்தெடுத்தேன். 

2011-ம் ஆண்டு IPS தேர்வாகி பயிற்சி முடித்து உதவி காவல் கண்காணிப்பாளராக அருப்புக்கோட்டை, திருப்பத்தூர் மற்றும் அதிதீவிரப்படை, சென்னையிலும் பணிபுரிந்தேன். பின்னர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று குடிமைபொருள் நுண்ணறிவு பிரிவு, இராமநாதபுரம் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், சென்னையில் அலுவலக தானியங்கி மற்றும் கணினிமயமாக்கல் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மதுரை கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளேன்.