மிதிவண்டியில் பயணித்த மாவட்ட ஆட்சியர்

08.12.2021 06:06:04

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வீட்டில் இருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு நாகை மாவட்ட ஆட்சியர் மிதிவண்டியில் சென்றுள்ளார்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 3 கி.மீ. தொலைவுக்கு சைக்கிளில் வந்ததாக ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.