வரலாற்றுத் தவறிழைத்துள்ளது கோட்டாபய !

04.05.2022 09:06:28

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியை இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 ஆண்டுகள் வரை இழுத்தடிப்பதா என்பதை அரசியல்வாதிகளே முடிவு செய்ய வேண்டும் என நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நாட்டின் பொருளாதார நிலை குறித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

தற்போது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் செய்த வரலாற்றுத் தவறுகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், வரி குறைப்பு, பொருத்தமான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தை நடாதமை மற்றும் கடன் மறுசீரமைப்பில் தாமதம் என்பனவே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.