இலங்கை தொடர்பில்பிரித்தானியா கவலை !
இலங்கையில் 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம்,
தமிழ் மற்றும் முஸ்லிம் நலன்புரி அமைப்புக்கள் உட்பட பல குழுக்களைத் தடைசெய்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் மீதான கட்டுப்பாடுகளுடன் சிறுபான்மை குழுக்களை அரசாங்கம் ஓரங்கட்டுவது தொடர்வதாக தெரிவித்துள்ளது.
அதோடு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அறிக்கையானது, கடந்த வருடத்தில் வெளிப்படும் போக்குகள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் , மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமை மற்றும் எதிர்கால மீறல்களின் கணிசமாக உயர்ந்த ஆபத்தைக் காட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.