பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்

21.01.2022 04:35:03

குடியரசு தின அணிவகுப்பில் கேரள அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அணிவகுப்பு விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கேரள அலங்கார ஊர்தி பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேரள முதல்வர் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.