9 வருடங்களின் பின் சடுதியாக அதிகரிக்கப்பட்டது மின் கட்டணம்..!

09.08.2022 10:30:11

மின் கட்டணம்

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பல தடவைகள் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி 9 வருடங்களின் பின் 75% மின் கட்டணம் அதிகரிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

75 சதவீத மின்சார கட்டணம்

அதன்படி நாளை (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.