அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 48ஆவது நாடாக விளங்கும் கிரேக்கம்

25.06.2021 11:21:23

கிரேக்கதில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து நான்கு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கதில் நான்கு இலட்சத்து இரண்டாயிரத்து 47பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 48ஆவது நாடாக விளங்கும் கிரேக்கத்தில் இதுவரை நான்கு இலட்சத்து 19ஆயிரத்து 909பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 13ஆயிரத்து 604பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 454பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 15பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்தாயிரத்து 258பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 256பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.