கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

25.11.2021 05:42:52

திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் நேற்று முன்தினம் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் உட்பட ஆறு பேர் பலியாகினர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து அந்த மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள் தலைமறைவாகியிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை தேடி பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறைறையினர் குறித்த 3 பேரையும் நேற்று (24) கைது செய்து நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கிண்ணியாவில் இன்றைய தினம் துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

வர்த்தக நிலையங்கள் மூடி, வீடுகளிலும் பொது இடங்களிலும் வெள்ளைக் கொடிகளை ஏற்றித் துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.