அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்!

15.04.2024 09:17:30

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

 

தற்போது நிலவும் போர்ச்சூழ்நிலை காரணமாக இஸ்ரேல் விமான நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே எதிர்வரும் நாட்களில் இலங்கையர்கள் இஸ்ரேல் வருவதற்கு காத்திருந்தால், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து திகதியை திருத்தியமைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.