தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யுங்கள் – இந்திய வெளியுறவு செயலர்

04.10.2021 06:01:26

ஒரு பரந்த நோக்கின் அடிப்படையில், இந்தியாவுடன் பெருமளவான கப்பல் பரிமாற்ற வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் கொழும்பு துறைமுகத்தின் அபிவிருத்தி மற்றும் விரிவாக்கம் போன்ற பரஸ்பர நன்மை அளிக்கும் திட்டங்களில் இந்திய முதலீடு மற்றும் பங்களிப்பின் ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் மார்க்கமான தொடர்புகள் மேலும் வலுவடையும் என்று நாம் உணர்கின்றோம். அத்துடன் இதன் பயனாக எமது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளும் மேலும் வலுவடையும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் பிரதான இலக்காக இலங்கை முழுவதும் சிறப்பான அபிவிருத்திக்கான இருவழி ஈடுபாடு அமைகின்றது. பகிரப்பட்ட கலாசாரம் மற்றும் பெறுமானங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் முடிவுகளை எடுக்கவேண்டியது இலங்கையினதும் அந்நாட்டு மக்களினதும் அறிவை சார்ந்தது. 

பல்லாயிரமாண்டு கால நீட்சியைக்கொண்டதும் பரஸ்பர நன்மை அளிக்கக்கூடியதுமான எமது உறவுகளின் மீது நாம் முழுமையான நம்பிக்கையினை கொண்டிருக்கின்றோம் என்றும் இந்திய வெளியுறவு செயலர் குறிப்பிட்டுள்ளார்.