மணிப்பூரில் குண்டு வெடிப்பு : முக்கிய வீதி சேதம்

25.04.2024 09:08:30

மணிப்பூர் மாநிலம் காங்போகி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பின்பு, மாவட்டத்தின் சபர்மீனாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை; உள்ள பாலத்தில் நேற்று அதிகாலை சுமார் 1 மணிக்கு மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

 

மணிப்பூரின் வெளிப்புறத் தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், இம்பால் பள்ளத்தாக்குக்கு அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் முக்கியமான சாலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடம் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், இந்தச் சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுபேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related