இளம் யுவதியை மோதித் தள்ளியது ரயில்

04.04.2023 21:03:53

வெள்ளவத்தை பகுதியில் நேற்றையதினம் (03) 21 வயதுடைய யுவதியொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

தெஹிவளையில் இருந்து கரையோரப் புகையிரதப் பாதை ஊடாக கொழும்பு - கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில் குறித்த யுவதி மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலம் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில்

உயிரிழந்தவர் மொரட்டுவையைச் சேர்ந்த 21 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை வெள்ளவத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.