கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு - நெதர்லாந்
08.01.2021 08:45:00
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் எட்டு இலட்சத்து 50ஆயிரத்து 790பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 19ஆவது நாடாக விளங்கும் நெதர்லாந்தில் இதுவரை மொத்தமாக 12ஆயிரத்து 84பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஒன்பதாயிரத்து 627பேர் பாதிக்கப்பட்டதோடு, 85பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 708பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.