மீண்டும் விசாரணை

15.12.2022 00:06:00

முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், முட்டைக்கான அதிகபட்ச விலையை இன்று (14) நிர்ணயம் செய்யுமாறு அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவை இன்று மீண்டும் பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 மீண்டும் விசாரணை

இந்த மனு நாளை (15) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இதேவேளை நத்தார் மற்றும் புதுவருடம் நெருங்கும் நிலையில் முட்டைக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.