ஜனாதிபதி விடுத்த அழைப்பு

27.12.2024 09:36:52

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும், பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஆயுதப்படைகள் அழைக்கப்பட்டுள்ளன.

அதற்கு அமைவாக, இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது.