ஆச்சரியப்பட வைத்த வெளிநாட்டவர்கள்

06.04.2024 09:50:35

வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரம் அருள் மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப் பெருமானின்  வருடாந்த மகோற்சம் நடைபெற்று வருகின்றது.

இந்த உற்சலத்தின் போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் இந்து மத கலாச்சார உடையுடன் வருகை தந்து பக்தியுடன் சாமி தூக்கினர்.

சுவாமி வீதிஉலா வரும் போது அவர்கள் சுவாமியை தூக்கியுள்ளனர். வெளிநாட்டவர்கள் இவ்வாறு சுவாமி தூக்கும் நிகழ்வை அங்குள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.