வவுனியால் இயற்கைக்கு மாறாக நடந்த அதிசயம் - படையெடுக்கும் மக்கள்

09.03.2022 05:02:32

வவுனியால்  பசு மாடு ஒன்று இயற்கைக்கு மாறாக மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது. பனையாண்டான் கிராமத்திலுள்ள பண்ணையாளரின் வீட்டில்  இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் முதன்முறையான இவ்வாறான அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக பசு மாடொன்று ஒரு கன்றை ஈன்றுவது இயற்கை. சில சந்தர்ப்பங்களில் இரண்டு கன்றுகளையும் ஈன்றுள்ளன. இந்நிலையில் மூன்று கன்றுகளை ஒரே நேரத்தில் ஈன்றுள்ளமையானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிசய சம்பவத்தை காண பெருமளவு மக்கள் பசு மாட்டின் உரிமையாளரின் வீட்டுக்கு சென்று வருகின்றனர்.