நச்சு வாயு கசிந்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

11.01.2022 11:51:50

மங்களூரில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நச்சு வாயு கசிந்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலையில் 80 பேர் பணியில் இருந்த நிலையில் வாயு கசிவால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புத்துறையினர் வாயு கசிவை நிறுத்தி தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.