கொவிட்-19 இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

20.05.2021 09:49:14

 

ஸ்லோவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவேனியாவில் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்து 453பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள 67ஆவது நாடாக விளங்கும் ஸ்லோவேனியாவில் இதுவரை நான்காயிரத்து 338பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 532பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறாயிரத்து 673பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 110பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக இரண்டு இலட்சத்து 39ஆயிரத்து 442பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.