ஐநாவில் இலங்கை விவகாரத்தில் கனடா தலைமைத்துவம் வழங்குவது மீண்டும் தேவையான விடயமாக காணப்படுகின்றது
பரீடா டெய்வ் – சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கனடாவிற்கான இயக்குநர்
இலங்கையில் தசாப்தகால யுத்தம் மற்றும் ஒடுக்குமுறைக்கு பின்னர் நல்லிணக்கத்தையும் நீதியையும் ஏற்படுத்துவதற்கு அவசியமாகயிருந்த முக்கியமான ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்த நாடுகளில் ஒன்றாக கனடா காணப்பட்டது.
இலங்கையில் மனித உரிமை நிலவரம் மீண்டும் மோசமடைகின்றது ,இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பதற்கான செயற்பாடுகளை தீவிரப்படுத்துவது கனடாவிற்கு முக்கியமானது.
மாத இறுதியில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு ஆரம்பமாகின்றது.
இலங்கை தனது தற்போதைய பாதையில் செல்வதற்கு அனுமதிப்பதா அல்லது பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இலங்கையர்களை பாதுகாத்து சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதா என்பதை என்ற முக்கிய கேள்வியை மனித உரிமை பேரவை எதிர்கொள்கின்றது
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் வெளிப்படையான உண்மைகளை முன்வைத்துள்ளார்.அவர் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெளிவாக தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிகளிற்கு தலைமை தாங்ககூடிய சிறந்த இடத்தில் கனடா காணப்படுகின்றது,சர்வதேச குற்றங்களிற்கான பொறுப்புக்கூறலை தீவிரப்படுத்துவது மேலும் பயங்கரங்களை தடுத்து நிறுத்தும். உடனடி நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் எச்சரிக்கை சமிக்ஞைகள் செவிமடுக்கப்படுவதை கனடா அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும்,