ஜேர்மனியில் பயங்கரம் - ரயிலில் பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் -இருவர் பலி

25.01.2023 23:56:13

ஜேர்மனியின் வடக்கு பகுதியில் ஓடும் ரயிலில் பயணிகளை குறிவைத்து இன்றையதினம் கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஹம்பர்க்-கீல் வழித்தடத்தில் ப்ரோக்ஸ்டெட் ரயில் நிலையத்தை ரயில் நெருங்கியபோது மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதல் நடத்தியவர் கைது

இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்துவதற்காக, ஹம்பர்க்-கீல் இடையிலான வழித்தடத்தில் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.