நிதிச் சீராய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்

16.09.2021 05:40:40

2021 ஆண்டின் 18 ஆம் இலக்க நிதிச் சீராய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சட்டமூலமானது கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.

இதன்படி சபாநாயகர் அதில் கையொப்பமிட்டதன் ஊடாக குறித்த சட்டம் நேற்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.