பிரமாண்ட பேரணியை நடத்தும் இம்ரான்கான்

28.10.2022 15:59:46

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கடசி தலைவருமான இம்ரான் கான் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு மிகபெரும் பேரணியை தொடங்கினர். 70 வயதான கான், நவம்பர் 4 ஆம் தேதி இஸ்லாமாபாத்திற்கு வர திட்டமிட்டுள்ளார், மேலும் தனது கட்சிக்கு எதிர்ப்பு பேரணி நடத்த அனுமதிக்க அரசாங்கத்திடம் முறையான அனுமதி கோரியுள்ளார். இந்த் பேரணிக்கு நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம் என பெயரிடப்பட்டு உள்ளது. அவர் பேரணிக்குப் பிறகு திரும்பிச் செல்வாரா அல்லது 2014 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களால் பாராளுமன்ற கட்டிடத்தின் முன் 126 நாள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியபோல் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டமாக மாற்றுவாரா என்ற பரபரப்பு எழுந்து உள்ளது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைதியை நிலைநாட்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது, அதே நேரத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமையை உருவாக்கும் எந்த முயற்சியும் இரும்புக்கரம் கொண்டு எதிர்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளது.பாகிஸ்தானில் பிரமாண்ட பேரணியை நடத்தும் இம்ரான்கான் இந்தியாவை மீண்டும் பாராட்டி பேசினார் லிபர்ட்டி சவுக்கில் ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான் கான் தனது முதல் உரையில் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டி பேசினார். இம்ரான் கான் கூறியதாவது:- எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும், ஆனால் நான் என் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதால் அமைதியாக இருக்கிறேன். முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்கிறேன். இல்லையெனில் என்னால் நிறைய சொல்ல முடியும் என கூறினார் சுதந்திரமான பாகிஸ்தானைப பார்க்க விரும்புவதாகவும், அதற்கு சக்திவாய்ந்த ராணுவம் தேவை. நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களை விமர்சிக்கும்போது, அது ஆக்கப்பூர்வமாகவும் உங்கள் முன்னேற்றத்திற்காகவும் இருக்கிறது. நான் இதை மீண்டும் சொல்கிறேன், என்னால் நிறைய சொல்ல முடியும் மற்றும் உங்களுக்கு பதிலளிக்க முடியும். ஆனால் பாதுகாப்பு நிறுவனங்கள் பலவீனமடைவதை நான் விரும்பவில்லை. "எனக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் வேண்டும். யார் நாட்டை வழிநடத்துவது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என கூறினார்.