
பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் அநுர.
27.09.2025 09:00:00
ஐக்கிய நாடுகள் சபையின் (BBNJ) பிரகடன உடன்படிக்கையின் அங்கத்துவத்தில் 60 நாடுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, பிரான்ஸ் அரசாங்கம் சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதன்போது, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனை சந்தித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.