சிறையில் தீ விபத்து - கைதிகள் 41 பேர் உயிரிழந்தனர்

08.09.2021 09:06:54

இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் தீ விபத்து ஏற்பட்டு கைதிகள் 41 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள டேங்கராங் சிறையில் தைப்பொருள் கடத்தல் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,225 கைதிகளை அடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிறையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அதிகமானோர் சிறைச்சாலைக்குள் இருந்ததால், விபத்து நடந்ததும் வெளியேறுகையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 41 கைதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். டுகாயமடைந்த மேலும் 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருந்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.