பிரதமர் மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார்
27.02.2022 16:11:23
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நம் நாட்டிற்கு நடவடிக்கை தேவை. பிரதமர் மோடி கவனச்சிதறலை மட்டுமே வழங்குகிறார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.