மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

10.09.2026 15:08:00

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைகான தனது மூன்று நாள் உத்தியோகபூர் விஜயத்தை நிறைவு செய்துவிட்டு நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

 

அவர் இன்று (10) பிற்பகல் 1.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA) விசேட விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது

தனது இந்த விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.