சுமார் 100 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!
28.11.2025 14:01:27
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பல இறப்புகள் பதிவாகியுள்ளன.
பதுளை மாவட்டத்தில் மாத்திரம் பேரழிவு காரணமாக 35 பேர் இறந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கண்டி மாவட்டத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாகவும், மேலும் 67 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
கண்டியின் ஹசலகாவில் உள்ள யஹங்கல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
மேலும், கேகாலையின் புலத்கோஹுபிட்டியவில் உள்ள தேதுகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.