பிரித்தானியாவில் தமிழர்களுக்கான ஈருருளிப்பயணம்!

01.09.2025 07:55:45

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில்  இலங்கைத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வினை வலியுறுத்தி  கடந்த 28 ஆம் திகதி  பிரித்தானியவில் ஈருருளிப்பயண போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.

 

இதேவேளை நெதர்லாந்திலும் குறித்த  ஈருருளிப்பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பயணத்தின் 4 ஆம் நாளான நேற்று (31) நெதர்லாந்து பிறேடா நகரசபைக்கு முன்பாக  ஈருருளிப்பயணம் ஆரம்பமானது.

இந்நிலையில் குறித்த  ஈருருளிப்பயணம் நேற்றைய தினம்  பெல்ஜியம் எல்லையை   சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.