ஹசரங்கவுக்குத் தடை

25.02.2024 13:43:37

இலங்கையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் வனிடு ஹசரங்கவுக்கு, சர்வதேச கிரிக்கெட் சபையால் இரண்டு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் நோ போல் வழங்காத நடுவர் லின்டன் ஹனிபல்லுடன் மோதியமையடுத்தே போட்டித் தடையும், அவரது போட்டி ஊதியத்தின் 50 சதவீத அபராதமும் ஹசரங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.