கொவிட்-19 தொற்றினால் இத்தாலியில் 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு !
இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 30இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இத்தாலியில் 30இலட்சத்து 23ஆயிரத்து 129பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 8ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில் இதுவரை 99ஆயிரத்து 271பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 24ஆயிரத்து 26பேர் பாதிக்கப்பட்டதோடு 297பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நான்கு இலட்சத்து 56ஆயிரத்து 470பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 525பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 24இலட்சத்து 67ஆயிரத்து 388பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.