செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

27.08.2021 11:00:00

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 30ம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலம் நிறைவடையவுள்ள நிலையில், செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இன்று(27) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த ஊரடங்கு உத்தரவானது அத்தியாவசிய சேவையாளர்களுக்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.