மாத்தளை நகரில் இடம்பெற்ற முகை திரைப்படத்தின் அறிமுக நிகழ்வு

07.06.2022 05:55:50

கடந்த 05/06/2022 ஞாயிற்றுக்கிழமை, மாத்தளை காந்தி மண்டபத்தில்  பி.ப - 03.00 மணிக்கு இலங்கை கலைஞர்களின் படைப்பான முகை திரைப்படத்தின் அறிமுக நிகழ்வு இடம் பெற்றது. 

நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் - துரை மனோகரன் ( பேராதனை பல்கலைக்கழகம் )அவர்களும், 

கெளரவ  விருந்தினர்களாக திரு . ஜனுதீன் - ( பணிப்பாளர் - ஐ டெக் கல்லூரி ,உளவியல் நிபுணர் ,IELTS விரிவுரையாளர்)அவர்களும்  திருமதி .ப்ரியமதா பயஸ் ( சுயாதீன ஊடகவியலாளர், எழுத்தாளர், உதவி ஆசிரியர் காலைக்கதிர் பத்திரிகை- யாழ்ப்பாணம் ,வானொலி அறிவிப்பாளர் - நோர்வே தேன்தமிழோசை ,பெண்கள் ,சிறுவர்கள் தொடர்பான சமூக செயற்பாட்டாளர் வடக்கு மாகாணம், )அவர்களும் ,

திரு .B.பாலசுப்பிரமணியம் (அதிபர் - கடுபெல்ல த.வி ), திரு .பெ .மாத்தளை வடிவேலன்  (மூத்த எழுத்தாளர் ,இலக்கியவாதி),திரு .மு .சிவஞானம் (மாத்தளை - முன்னாள் மாநகரசபை உறுப்பினர் )அவர்களும் 

சிறப்பு விருந்தினர்களாக 
திரு .S .கேசவன் - (உரிமையாளர் - கேசவன் டெக்ஸ் ,தலைவர் - சுபீட்ஷம் அமைப்பு )
திரு .S .சிவனேஸ்வரராஜா (அதிபர் - திருவள்ளுவர் தமிழ் மகா வித்தியாலயம் )
திரு .M .ஆறுமுகம் (அதிபர் - விவேகானந்தா த.வி )
திரு .v  .சர்வானந்தா (தலைவர் - மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்)
திரு .து .சந்திரசேகரம் (தலைவர் - சைவ மகா சபை -மாத்தளை ) ஆகியோரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் .


நிகழ்வில்  தலைமை உரையை  விழா குழு தலைவர் மா .சுரேஷ்குமார் (பணிப்பாளர் ஐ பெக்டா உயர்கல்வி நிறுவனம் ,அகில இலங்கை சமாதான நீதவான் ) வழங்கினார் .

நன்றியுரையை முகை திரைப்பட தயாரிப்பாளர் - N சுபத்திரா S அவர்கள் வழங்கினார் .நிகழ்வில் ஏராளமான மக்கள் ,நலன்விரும்பிகள் கலந்துகொண்டு சிறப்பித்தமையோ குறிப்பிடத்தக்கது.