
சந்நிதியில் இருந்து கதிர்காமம் பாதயாத்திரை ஆரம்பம்!
03.05.2025 09:24:21
கதிர்காமத்திற்கான பாதயாத்திரை செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது. சந்நிதியான் ஆச்சிரமத்தில் விசேட பூசை வழிபாடுகளுடனும், காலை ஆகாரமும் ஒரு தொகை பணமும் வழங்கப்பட்டு ஆச்சிரம சுவாமிகளது ஆசீர்வாதத்துடன் சிறப்பாக ஆரம்பமானது. |
வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு , அம்பாறை, மொனராகல ஆகிய மாவட்டங்கள் ஊடாக (46 தினங்கள் 815 கிலோமீற்றர் தூரம்) கதிர்காமத்தை சென்றடையும். கதிர்காம ஆலய கொடியேற்ற நிகழ்வு எதிரவரும் 26.06.2025 திகதி என்பதும் குறிப்பிடத்தக்கது |