சீனா தொடர் முட்டுக்கட்டை

20.10.2022 15:43:14

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல் கொய்தா அமைப்புக்கான தடை கமிட்டியின் கீழ் மகமூத் பயங்கரவாதியை, கருப்பு பட்டியலில் வைப்பதற்கான முன்மொழிவை இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கும் சீனா தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஏற்கனவே, லஷ்கர் இ தொய்பாவின் சஜீத் மிர், ஜமாத் உத் தாவா அமைப்பின் அப்துல் ரெஹ்மான் மக்கி, அப்துல் ரவுப் அசார், ஜெய்ஸ் இ முகம்மது தலைவர் மசூத் ஆசார் ஆகியோரை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியாமல் தடுத்து சீனா பாதுகாத்து வருகிறது. இதில் சஜீத் மிர் என்பவன் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவன் ஆவான் என்பது குறிப்பிடத்தக்கது.