இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி எப்போது ?- வெளியான தகவல்
26.12.2021 16:33:28
இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கான கால இடைவெளி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி, 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 9 முதல் 12 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் வகையில் கால இடைவெளியை நிர்ணயிக்க நோய்த்தடுப்பு பிரிவு மற்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி.ஐ) நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பரவலாக செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.