மாநிலத்தின் உரிமைகளை பரிகொடுத்து விட்டனர்

30.03.2024 09:03:14

தமிழர் நிலத்தில் தன்னாட்சி உருவாக வேண்டும். அதற்கான அரசியல் கொள்கைகளுடனே நாம் தமிழர் கட்சி செயல்படுகிறது” என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

திருநெல்வேலியில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யாவை ஆதரித்து, ஆலங்குளத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்ற நிலையில், ஒற்றைக் கட்சி ஆட்சி சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும.; ஆனாலும், மாநிலத்தின் உரிமைகளை பறிகொடுத்து விட்டனர் என கூறியுள்ளார்.

அதிகார பரவலாக்கம் என்பதே நாம் தமிழர் கட்சியின் கொள்கை. மற்ற கட்சிகள் வெற்றி பெற்றால், அது ஒரு சாதாரண நிகழ்வு. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் அது சரித்திரம் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி மலர நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் எனவும் ஹிந்தி அறிந்தவர்கள் மட்டும் பிரதமர் ஆகவும், அமைச்சர் ஆகவும் இருந்து நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்வது ஜனநாயக விரோதம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.