தீர்வு காண தமிழர் தரப்புக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி

10.11.2022 15:45:52

தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலந்துரையாடுவதற்கும், சர்வதேசத்தின் தலையீடுகள் இன்றி சுமுகமாக தீர்வு காண்பதற்கும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று நாளுமன்றத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதற்காக அடுத்த வாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமிழ் தரப்புக்கள் கலந்துகொள்ளுமாறும் அவர் கூறினார்.

வட மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும், பசுமை தொடர்பான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, ஏற்கனவே கைதிகள் தொடர்பில் ,அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது சிறையில் உள்ள எழுத்தாளார் தொடர்பில் வழக்கு இடம்பெற்று வருகின்றது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவரின் விடுதலை அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணாமல் போனோர் விடயங்களையும் ஆராய்ந்துவருவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில், .அடுத்த வாரம் இது பற்றி தமிழ் தரப்புடன் கலந்துரையாடவுள்லதாகவும், அதற்கு தமிழர் தரப்பு பங்களிப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.