பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 29,079பேர் பாதிப்பு- 1,245பேர் உயிரிழப்பு

30.01.2021 10:00:33

 

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 29ஆயிரத்து 079பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்து 245பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 37இலட்சத்து 72ஆயிரத்து 813பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து நான்காயிரத்து 371பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 19இலட்சத்து 94ஆயிரத்து 506பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 918பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 16இலட்சத்து 73ஆயிரத்து 936பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.