வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபை ஊழியர்கள் எச்சரிக்கை!

06.10.2021 14:26:02

பாரிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கத் தயாராக உள்ளதாக இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே குறித்த தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் அரசாங்கத்தின் தீர்மானங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால் இவ்வாறு பாரிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கவுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

இரண்டு மணிநேர வேலைநிறுத்தத்தினால் அரசாங்கத்தை மண்டியிட வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.