
ஏமன் துறைமுகம் மீது இஸ்ரேல் தாக்குதல்!
ஏமனின் ஹொடைடா (Hodeidah) துறைமுகத்தின் மீது திங்கட்கிழமை (05) வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் பிரதான விமான நிலையத்திற்கு அருகே ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் ஏவுகணையை ஏவிய ஒரு நாளுக்குப் பின்னர் இந்த தாக்குதல் வந்துள்ளது.
ஹொடைடா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஹவுதி பயங்கரவாத இலக்குகள் என்று அழைக்கப்பட்ட இடங்களைத் தாக்கியதாக இராணுவம் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 35 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் சபா செய்தி நிறுவனம் சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது.
தாக்குதலை தொடர்ந்து துறைமுகம் மற்றும் சிமெந்து தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதியை ஹவுத்திகள் மூடிவிட்டதாக மூன்று வட்டாரங்கள் தெரிவித்தன.
துறைமுகத்தில் ஏற்பட்ட சேதத்தின் அளவு தெரியவில்லை என்றும், ஆனால் தாக்குதல்கள் மற்றும் தீ விபத்துகளின் தீவிரம் கொள்கலன்களின் நிறுத்துமிடத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் கூறினர்.
துறைமுகத்தின் ஐந்து கப்பல்துறைகள், கிடங்குகள் மற்றும் சுங்கப் பகுதியில் 70% சேதம் ஏற்பட்டதாக வேறு இரண்டு ஆதாரங்கள் மதிப்பிட்டுள்ளன.
இரண்டு கப்பல்கள் தங்கள் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தபோது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
துறைமுகத்தில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்துவிட்டது என்று துறைமுக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
ஏடனுக்குப் பிறகு செங்கடலில் இரண்டாவது பெரிய துறைமுகம் இதுவாகும், மேலும் இது ஏமனின் உணவு இறக்குமதியில் சுமார் 80% நுழைவாயிலாகும்.