கெடுபிடிகளுக்கு மத்தியில் “மாவீரர் வாரம்” ஆரம்பம்

21.11.2021 09:55:33

தமிழர்களின் உரிமைப் பேராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பிக்கிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்றைய தினம் (21) ஆரம்பிக்கவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்படவுள்ளது.

தாயகப் பகுதியில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்தத் தடை உத்தரவு ஏற்கனவே பெறப்பட்டுள்ள நிலையில் இன்று மாவீரர் வாரம் ஆரம்பமாகின்றது.