விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம் பின்னணி என்ன?
|
டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்த போது அரகஜா போட்டு வைத்திருந்த முதல்வர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்த போது சிவப்பு நிற குங்கும பொட்டு வைத்திருக்கிறார். முதல்வரின் விஜய்யின் இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்த விவாதம் எழுந்துள்ளது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப் பயணமாகத் டெல்லி சென்றுள்ள விஜய், அங்கு பல்வேறு முக்கியத் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். நிர்வாக ரீதியிலான இந்த சந்திப்புகளுக்கு இடையே, முதல்வர் விஜய்யின் நெற்றியில் இருந்த 'பொட்டு' மாற்றம் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு சுவாரசியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. |
|
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்த போது கறுப்பு நிற 'அரகஜா' பொட்டு வைத்திருந்த முதல்வர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்த போது 'சிவப்பு நிற குங்குமப் பொட்டு' வைத்திருந்ததுதான் இந்த விவாதத்திற்குக் காரணம். டெல்லி பயணத்தின் ஒரு பகுதியாக, குடியரசு துணைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில், முதல்வர் விஜய்யின் நெற்றியில் கறுப்பு நிற 'அரகஜா' திலகம் இடப்பட்டிருந்தது. ஆன்மீக ரீதியாக, தீய சக்திகளில் இருந்து காக்கவும், நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும் இந்த அரகஜா திலகம் வைப்பது வழக்கம். ஆன்மீக அடையாளங்களை அதிகம் விரும்பும் பாஜக பின்னணி கொண்ட தலைவரைச் சந்திக்கும் போது, இந்த திலகத்துடன் விஜய் சென்றது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட குறியீடா என விவாதங்கள் எழுந்தன. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்திக்கச் சென்ற போது, முதல்வர் விஜய்யின் நெற்றியில் பளிச்சென்று 'சிவப்பு நிற குங்குமப் பொட்டு' இடம் பெற்றிருந்தது. காங்கிரஸ் தலைவர்களுடனான சந்திப்பிற்குச் செல்லும் வழியில் அல்லது தமிழ்நாடு இல்லத்தில் மங்களகரமான குங்குமத் திலகம் மாற்றப்பட்டிருக்கலாம். பொதுவாகச் சிவப்பு குங்குமம் மதச்சார்பற்ற மற்றும் அனைவருக்குமான ஒரு பொது அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் 'பொட்டு வைக்காத' பாரம்பரியத்திற்கு மாற்றாக, தனது மதச்சார்பற்ற ஆன்மீக அரசியலை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்தி வரும் முதல்வர் விஜய், டெல்லி அரசியலிலும் தனித்துவமான பாணியை காட்டியுள்ளதாக அவருடைய ஆதரவாளர்கள் சிலாகித்து வருகின்றனர். |