விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

11.03.2024 08:00:00

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நியுசிலாந்தின் அவுக்லாண்ட்டிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்டம் எயர்லைன்ஸ் விமானத்திலேயே  தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது இதனால்; விமானம் தடுமாறத்தொடங்கியது என லட்டம் எயர்லைன்ஸ்  தெரிவித்துள்ளது.

விமானம் அவுக்லாண்டில் தரையிறங்கியதும் பயணிகள் தயார் நிலையில் நின்ற அம்புலன்ஸில் அவசரஅவசரமாக ஏற்றப்பட்டனர்.

எங்கள் அம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்கள் பயணிகளை உடனடியாக மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தினர் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ஒருவர் கடுமையாக பாதி;க்கப்பட்டுள்ளார் என  ஹட்டோ ஹோன் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

13 பயணிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.