விசேட போக்குவரத்துத் திட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை!

22.03.2024 07:48:48

தமிழ், சிங்களப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து அமைச்சு  திட்டமிட்டுள்ளது.

 

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் இலங்கை போக்குவரத்துச் சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, புகையிரத திணைக்களம் மற்றும் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, தமிழ், சிங்களப் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட பொதுப் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் சிறப்புத் திட்டத்தின் கீழ் விசேட பேருந்து மற்றும் புகையிரதங்களை இயக்கத் தயாராகவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.