ஈரான் தூதரகத்தில் இரங்கல் புத்தகம் திறப்பு.

04.03.2026 14:31:41

தெஹ்ரானில் அமெரிக்க மற்றும் சியோனிச ஆட்சியின் தாக்குதல்களின்போது, கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி ஈரானின் உயரிய தலைவர் செய்யித் அலி கமேனி (Sayyed Ali Khamenei) வீரமரணம் அடைந்த செய்தியை, கொழும்பிலுள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகம் ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கின்றது.

மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, கொழும்பு-07, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் (இல. 222) இரங்கல் புத்தகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கும், வீரமரணம் அடைந்த தலைவரின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் தமது அனுதாபங்களையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதற்கும் இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.