மூன்றாம் பாலினத்தவர்கள் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்ற ஜோ பைடன் உத்தரவு!
அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த தடையை நீக்கி , அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றிய பராக் ஒபாமா , மூன்றாம் பாலினத்தவர்கள் இராணுவத்தில் சேர வழிவகை செய்தார் .
எனினும் ஒபாமாவின் இவ் உத்தரவை பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் நீக்கினார். அதன்படி, அமெரிக்க இராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணி புரியலாம் ஆனால் இராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.
தற்போது இத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்க இராணுவத்தில் சேவை செய்யத் தகுதியுள்ள அனைவரும் இராணுவத்தில் சேரலாம்.
தகுதியுள்ள அனைவரும் ,வெளிப்படையாகவும் பெருமையுடனும் சேவை செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும், அதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பைடன் கூறினார் .
ஜோ பைடனின் இந்த நடவடிக்கையை , அமெரிக்காவிலுள்ள மூன்றாம் பாலின மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.