தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!

10.09.2021 09:19:18

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணி கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 13 ஆம்திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.