சகுராய் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தலைமை பொறியியலாளர் கைது

11.01.2022 04:46:18

சகுராய் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை பொறியியலாளர் ஆகியோர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் கட்டுநாயக்க கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் இலகுரக விமானம் ஒன்று தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் வௌிநாட்டு பயணிகள் இருவர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தை தொடர்ந்து சகுராய் விமான சேவையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.