கொவிட்-19 தொற்றிலிருந்து கொலம்பியாவில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

05.02.2021 08:49:12

 

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 135பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 11ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில், இதுவரை 21இலட்சத்து 35ஆயிரத்து 412பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 55ஆயிரத்து 131பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஒன்பதாயிரத்து 790பேர் பாதிக்கப்பட்டதோடு 254பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 79ஆயிரத்து 146பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 482பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.